21 ஜூன், 2010

சரத் அளித்த பேட்டி:ஊடகவியலாளர் குறிப்பேடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் போது கூறப்பட்ட விடயங்களைப் பதிவு செய்த குறிப்பேட்டை 'சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியர் பெற்றிகா ஜெனஸ் இன்று நீதிமன்றத்தில் கையளித்தார்.

இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைகொடியேந்தி சரணடைய வந்த புலி உறுப்பினர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் தனக்கு உத்தரவிட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக, பேட்டியின்போது பயன்படுத்திய குறிப்பேட்டினை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் சம்பா ஜானகி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.

அதன்பிரகாரம் 89 பக்க குறிப்பேட்டை பெற்றிகா ஜெனஸ் நீதிமன்றத்தில் இன்று கையளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான் விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக