21 ஜூன், 2010

டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு மத்திய அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு







இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் கொலை, மிரட்டல், கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 1990-ம் ஆண்டு கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலையானார்.

அதன் பிறகு இந்த வழக்குகளின் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் குற்றவாளியாக சென்னை கோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு வந்தார். அப்போது சென்னை யைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டடக்ளஸ் தேவானந்தா இலங்கை மந்திரியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை போலீஸ் தரப்பில் மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்ப தாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி இதில் பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத் துக்கு நீதிபதிகள் ஒத்தி
வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக