21 ஜூன், 2010

சட்டவிரோதமாக 200 இலங்கையர் ஆஸி.நோக்கி பயணம்:இலங்கை அரசு

சட்டவிரோதமாக 200 இலங்கையர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த இலங்கையர்கள் பல நாட்களாக இவர்கள் பயணித்து வருவதாகவும், படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வெல்கம்பொல, அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

'சன் சீ' என்ற படகில் 200 இலங்கையர்கள் சென்றிருந்ததாகத் தகவல் கிடைத்திருந்த போதிலும், எந்த நாட்டுக் கொடியுடன் குறித்த படகு பயணித்திருந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரிய வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படகொன்றில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கனடாவை நோக்கிப் பயணித்திருப்பதாகவும், பின்னர் குறித்த படகு அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் ஆஸி. ஊடகமொன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக