26 ஜூன், 2010

முல்லைத்தீவு மக்கள் திங்களன்று மீள்குடியேற்றம்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் உறவினர்களது வீடுகளில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இவர்கள் திங்களன்று அவர்களது சொந்த இடங்களில் மீளகுடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

உறவினர்களது வீடுகளில் வாழும் 195 குடும்பங்களைச் சேர்ந்த 556 பேரே இவ்வாறு மீள்குயமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு கரைத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக