26 ஜூன், 2010

நிறைகுறைவான பாண், அதிகவிலைக்கு பால்மா விற்பனை செய்த 60 பேர் கைது



பல்வேறு பகுதிகளில் நடத்திய தேடுதல்களின் போது பால்மாவை கூடுதல் விலைக்கு விற்ற 20 பேரை யும் நிறைகுறைவான பாண் விற் பனை செய்த 40 பேரையும் கைது செய்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.

கடந்த வாரம் முதல் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டன.

ஆனால் பழைய விலைக்கு உள்ள பால்மா பக்கெட்டுகளை அதே விலைக்கு விற்க வேண்டும் என வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தது.

ஆனால் பழைய விலை குறிப் பிடப்பட்டுள்ள பால்மா பக்கெட்டு களை புதிய விலைக்கு விற்ற 20 வியாபாரிகளே இவ்வாறு பிடி பட்டதாக அதிகார சபை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதேவேளை நிறைகுறைவான பாண் விற்பனை செய்த 20 வியா பாரிகள் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் கைது செய்யப் பட்டதாகவும் அதிகார சபை கூறியது.

இவர்கள் 350 கிராம் எடையுள்ள பானை விற்பனை செய்துள்ளது சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது தெரியவந்துள்ளது. விசேட சுற்றிவளைப்புக் குழுவொன்று இந்தத் தேடுதலை நடத்தியது.

தொடர்ந்து இத்தகைய தேடுத ல்கள் நடத்தப்படும் எனவும் அறி விக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக