8 ஜூன், 2010

பாராளுமன்றத்தில் 69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்யப்பட்ட அவசர காலச்சட்டம் மீதான பிரேரணை 69 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த போதும் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.ஏ. காதர் ஆளும் கட்சியுடன் இனைந்து அவசரகாலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்.

இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதோடு வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக