8 ஜூன், 2010

இலங்கை அரசுக்கு பொன்சேகா எச்சரிக்கை





கொழும்பு : இலங்கையில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விரைவில் அவர்களை விடுதலை செய்து மறுகுடியேற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இலங்கை அரசு மற்றொரு கடுமையான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இலங்கை பார்லிமென்டில் முன்னாள் இலங்கை ராணுவ தளபதியும், எம்.பி.,யுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் அவர் போரில் விடுதலை புலி தலைவர் பிரபாகரன் கொல்லபட்டபோது தான் நாட்டில் இல்லையென அரசு கூறியதாகவும் , தற்போது இலங்கையில் பயங்கரவாதம் இல்லாததால் அவசர நிலை சட்டம் ஏதும் தேவையில்லை எனவும் கூறினார். ராஜபக்ஷே டில்லி செல்லவுள்ள நிலையில் பொன்சேகாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக