8 ஜூன், 2010

30 வருட இழப்பை மீண்டும் கட்டியெழுப்பும் காலம் மலர்ந்துள்ளது : கெஹெலிய



கடந்த 30 வருடங்களாக நம் நாட்டுமக்கள் இழந்தவை எண்ணிலடங்காதவை. அவற்றை மீளக்கட்டியெழுப்பும் காலம் இப்போது மலர்ந்துள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல தெரிவத்தார்.

கண்டி அம்பதென்னை என்ற இடத்தில் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டு வைபவம் ஒன்றில் உரையாற்றும்போது, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"கடந்தகால யுத்தத்தின்போது நாம் எமது செல்வம், பொருளாதாரம், கல்வி, உயிர், உடைமை, நிம்மதி, சுதந்திரம், எதிர்காலம் என அனைத்து வளங்களையும் இழந்து நின்றோம். இப்போது 30 வருடகால யுத்தம் முடிவடைந்து இழந்த வளங்களை மீளக்கட்டி எழுப்பும் காலம் கிட்டியுள்ளது.

இனி நாம் இன,மத,மொழி, குல என அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் மறந்து இழந்த வளங்களை மீளக்கட்டி எழுப்ப முன் வரவேண்டும். எமது சக்தி வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நாட்டை வளமாக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு தயாராக உள்ளது" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக