8 ஜூன், 2010

தப்பிச் சென்றோரில் இருவர் கைது; ஏனையோர் பற்றித் தகவல் இல்லை : பிரஷாந்த

மாளிகாகந்தை சிறைக்கூண்டிலிருந்து நேற்று தப்பிச்சென்ற பதினொரு பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி சற்றுமுன்னர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பதினொரு பேரும் பலத்த பொலிஸ் காவலையும் மீறி தப்பிச் சென்றனர்.

அவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒருவர் சில நிமிடங்களில் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். மற்றுமொருவர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

எனினும், ஏனையோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக