8 ஜூன், 2010

இராணுவ வெற்றிவிழா 18ஆம் திகதி நடைபெறும் : அரசாங்கம்

காலநிலை சீர்கேட்டினால் ஒத்திவைக்கப்பட்ட போர் வெற்றிக் கொண்டாட்டங்களை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதன் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 20ஆம் திகதி காலி முகத்திடலில் இராணுவ வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், நாட்டில் பெய்த கடும் மழை காரணமாகக் கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக