23 மே, 2010

உரிய முறையில் செயற்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை நிவாரண பணிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் வெள்ளப்பெருக்கு நிலையைக் கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

இதற்கமைய பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கூட்டுச் செயற்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதுடன் தேவையான நிதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத அரச அதிகாரிகள் இருப்பின் அவர்கள் தொடர்பாக உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்திக்கவும் முழுமையான கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட சகல பிரிவினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ளம் விரைவாக வடிந்தோடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும் இணைந்து கூட்டுச் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

அதேநேரம், எதிர்காலத்தில் எந்த வொரு தாழ் நிலத்தையும் மண் கொண்டு நிரப்பும் நடவடிக்கையை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டு மென்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நகரங்களில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் போது உரிய திட்டமிடல் அவசிய மானதென்றும் ஜனாதிபதி அறி வுறுத்தியுள்ளார்.

இதேவேளை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவத்தினர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவது டன் அவசர தேவைகளின் நிமித்தம் விமானப் படையினரும் கடற்படை யினரும் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் 25இற்கும் அதிக மான படகுகளுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக