23 மே, 2010

இரத்தினபுரி மாவட்டத்தில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல்

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை டெல்வின் தோட்டப்பிரிவில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது ,டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 2 பெண்கள் , 2 சிறுவர்கள் , 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுல் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இக் கைக்குண்டு தாக்குதல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றிருக்கிறது என பொலிஸார் தெரிவித்தனர், இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக