23 மே, 2010

முல்லைத்தீவில் மீளக்குடிமர்ந்துள்ள மக்கள் தமது அவலங்கள், இழப்புகள், கஷ்டங்களை இதயம் குமுறிக் கண்ணீர் மல்ல விவரித்தனர்



Hi Jeya

முல்லைத்தீவில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் எஞ்சியிருப்பது நிர்க்கதியால் விளைந்த சோகம் மட் டுமே ஆகும். அவர் கள் நேற்று கூட்டமைப்பு எம்.பிக் களைச் சந்தித்தபோது அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது இனி என்ன செய்யப் போகிறோம் என்ற விரக்தியே!

முல்லைத்தீவில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் எஞ்சியிருப்பது நிர்க்கதியால் விளைந்த சோகம் மட் டுமே ஆகும். அவர் கள் நேற்று கூட்டமைப்பு எம்.பிக் களைச் சந்தித்தபோது அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது இனி என்ன செய்யப் போகிறோம் என்ற விரக்தியே!
எல்லோரும் தாங்கள் அனுபவித்த அவலங்கள், இழப்புகள், மீளக்குடியமர்ந்த பின்னர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட வாழ்க்கையை கொண்டோ டப்படும் கஷ்டங்கள், பற்றாமைகள் ஆகியன வற்றை அடுக்கடுக்காய் கண்ணீர் மல்கியவாறு இத யங்கள் குமுறக் குமுற எம்.பிக்களிடம் விவரித்தனர். எல்லோரது முகங்களும் அவர்களின் வெறுமைகளையே பிரதிபலித்தன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந் திரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோர் தவிர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று வன்னிக்குச் சென்ற னர்.

வவுனியாவில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நெடுங்கேணி மதியாமடு மகாவித்தியாலயத்துக்கு சென் றனர். அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாண வர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை கேட்டறிந்த னர்.
அதன் பின்னர் நெடுங்கேணி மகாவித்தி யாலயத்தில் அப்பகுதியில் மீளக்குடிய மர்ந்தவர்களைக் கூட்டமைப்பினர் சந்தித் தனர்.

உணவு, இருப்பிட வசதிகளுக்கு ஏற்பாடு இல்லை
அண்மையில் குடியமர்த்தப்பட்ட தங் களுக்கு எந்த வசதியும் செய்யப்பட வில்லை. உணவு, இருப்பிட வசதிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. பாட சாலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என மக் கள் கவலை தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ஒலுமடு மக்களை யும் அப்பிரதேச ஆசிரியர், மாணவர்களை யும் சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒட்டுசுட்டானுக்குச் சென்று வற்றாப்பளை அம்மனை தரிசித்து நந்திக்கடலையும் பார்வையிட்டனர். வற்றாப்பளைப் பகுதி கிராம சேவையாளரைச் சந்தித்து அந்தப் பிரதேச பிரச்சினைகள் குறித்தும் கேட்ட றிந்தனர்.

வன்னி விளாங்குளம் முத்துமாரி அம் மன் கோயிலில் நேற்று நடைபெற்ற பொங் கல் விழாவில் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு செயலகத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் எம்.பிக்கள் அங்கு கூடி யிருந்த மக்களுடன் கலந்துரையாடி நிலை மையைக் கேட்டறிந்ததுடன் முல்லைத் தீவு நகரத்தைச் சுற்றி அங்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகளைப் பார்வையிட்டனர்.

மாலையில் வவுனியா திரும்பிய எம். பிக்கள் வவுனியா "மனிக்பாம்' மக்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடவிருக் கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக