23 மே, 2010

போர்க் குற்ற விசாரணை நெருக்கடி; ஐ.நா.செயலரைச் சந்திக்கின்றார் பீரிஸ்




இலங்கை மீது அடிக்கடி குற்றஞ்சாட் டப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று அல்லது நாளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சு நடத்தவுள்ளார்.இலங்கை மீது அடிக்கடி குற்றஞ்சாட் டப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று அல்லது நாளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சு நடத்தவுள்ளார்.இலங்கையில் கடந்த வருடம் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை நியமிக்க ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், அவரை அமைச்சர் பீரிஸ் ஐ.நா தலைமை யகத்தில் சந்திக்கின்றார்.

மனித உரிமைகள் தொடர்பாக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பீரிஸ் பான் கீ மூனுக்கு விளக்கம் அளிக்கவிருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது." தொலைக்காட்சி மூலம் வெளிவந்துள்ள, தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதை மற்றும் கொலைகள் சம்பந் தப்பட்ட காட்சிகள் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் பீரிஸ், மூனிடம் எடுத்துரைப் பார்.இந்த விஜயத்தின்போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின் ரனையும் பீரிஸ் சந்திக்கவிருக்கின்றார் என வெளிவிவகார அமைச்சு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக