10 மே, 2010

பிரான்ஸ், இத்தாலியில்விமான இயக்கம் பாதிப்பு



லண்டன்:ஐஸ்லாந்து எரிமலைச் சீற்றத்தால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் கடந்த மாதம் 14ம் தேதி சீற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம், ஐரோப்பா வான் பகுதி முழுவதும் பரவியது. இதனால், ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் விமான போக்குவரத்து முடங்கியது. பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.ஐஸ்லாந்து எரிமலையில் தற்போது மீண்டும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்த வெளியேறிய புகையில், சாம்பல் துகள்கள் அதிகம் காணப்பட்டன. இவை, விமான இன்ஜினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக