10 மே, 2010

எம்டிவி நிறுவன தாக்குதல் : சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

எம்டிவி,எம்பிசி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 14 சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்தது.

மேற்படி நபர்கள், முன்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எம்டிவி, எம்பிசி நிறுவனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் இரு சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக