10 மே, 2010

சீனாவில் தாய்-மனைவி உள்பட 8 பேரை கொன்ற வாலிபர்


சீனாவில் ஜியாங்கி மாகாணத்தில் உள்ள செஞ்சியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியோயெஷ்காங் (36). இவர் தனது 80 வயது தாயார் மற்றும் மனைவி குழந்தைகளுடன் உள்ளார். நேற்று இவர் தனது வீட்டுக்கு கொலை வெறியுடன் சென்றார். அப்போது அவரது தாயார் மற்றும் 10 வயது மகள் இருந்தனர். முதலில் தான் வைத்திருந்த கத்தியால் மகளை குத்திக் கொலை செய்தார்.

அத்துடன் அவரது கொலை வெறி அடங்கவில்லை. தனது தாயாரை நோக்கி கொலை செய்ய பாய்ந்தார். இதனால் பதறிய அவர் ஷியோயெஷ்காங் காலில் விழுந்து என்னை எதுவும் செய்து விடாதே என்று கெஞ்சினார்.

ஆனால், ஈவு இரக்கமின்றி அவரையும் சரமாரியாக குத்தினார். இதனால் அவரும் ரத்த வெள்ளத்தில் பலியானார். அதன் பின்னரும் கொலை வெறி அடங்காத அவர் தனது மற்றொரு வீட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த தனது மனைவி மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் 2 பேரையும் கொலை செய்தார். எனவே, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூட்டம் கூடியது.

இதனால் மிரண்ட அவர் கூட்டத்தினரை கத்தியைக் காட்டி துரத்தினார். அவ்வாறு ஓடிய 3 பேரையும் குத்தி கொன்றார். மொத்தம் 8 பேரை கொலை செய்தார்.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து கொலையாளி ஷியோயெஷ்காங்கை சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.

எனவே, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக சீனாவில் குழந்தைகள் தான் பெருமளவில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் பியூஜியின் மாகாணத்தில் டாக்டர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து 8 குழந்தைகளை குத்தி கொன்றார். கடந்த சனிக்கிழமை ஹாங் நகரில் நடந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற கொலைகளுக்கு சீன மக்களிடம் ஏற்பட்டுள்ள மன அழுத்தமே காரணம் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக