10 மே, 2010

இதையடுத்து தமிழக அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு.


பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை : மத்திய அரசு அனுமதி
பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சையளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு தரப்பில், முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கடிதம் அனுமதி கோரியிருந்தார்.


"பார்வதி அம்மாள் மீதான தடை நீக்கப்படும். அவர் இந்தியா வருவதற்கு 6 மாத கால விசா வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

மேற்கண்ட இந்தத் தகவல் இன்று சட்டமன்றத்தில் 110 தீர்மானத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இது குறித்து தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்திய தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள், முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதினார்.

பார்வதி அம்மாவுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி தர பரி்ந்துரை செய்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு முதல்வர் எழுதினார்.

மேலும் நிபந்தனைகளை ஆராய்ந்து பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு அனுமதி தரலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாக சட்டசபையில் விதி எண் 110 கீழ் துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, இந்தியா வர அனுமதி அளித்துள்ளது.

அதேவேளை, அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் பார்வதி அம்மாளைச் சந்திக்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக