10 மே, 2010

பிர​பா​க​ரன் பெயரை பச்சை குத்​தி​ய​வர் சாவு விடு​த​லைப்பு​லியா என விசா​ரணை


கோவை,​​ மே 9: மார்​பில் "வேலுப்​பிள்ளை பிர​பா​க​ரன்' என்று பச்சை குத்​தி​ய​வர் தாரா​பு​ரத்​தில் மயங்கி விழுந்து இறந்​தார்.​ அவர் விடு​த​லைப்பு​லியா,​​ இலங்கை அக​தியா என போலீ​ஸக்ஷ்ர் விசா​ரிக்​கின்​ற​னர்.​

தி​ருப்​பூர் மாவட்​டம்,​​ தாரா​பு​ரத்​தில் சாலை​யோ​ர​மாக 45 வயது நபர் வெள்​ளிக்​கி​ழமை நடந்து சென்று கொண்​டி​ருந்​தார்.​ கடும் வெயில் கார​ண​மாக அவர் திடீ​ரென மயங்கி விழுந்​துள்​ளார்.​ அப்​ப​குதி மக்​கள்,​​ அவரை மீட்டு தாரா​பு​ரம் அரசு மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​தித்​துள்​ள​னர்.​ ​ம​ருத்​து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்​தும்,​​ அவ​ருக்கு நினைவு திரும்​ப​வில்லை.​ அவ​ரது மார்​பில் "வேலு​ப்பிள்ளை பிர​பா​க​ரன்' என்று பச்சை குத்​தப்​பட்​டி​ருந்​தது.​ மேல் சிகிச்​சைக்​காக கோவை அரசு மருத்​து​வ​ம​னைக்கு அவர் கொண்டு வரப்​பட்​டார்.​ ​

தீ​விர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்டு,​​ சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.​ இந்​நி​லை​யில்,​​ ஞாயிற்​றுக்​கி​ழமை அதி​காலை 3.30 மணி​ய​ள​வில் சிகிச்சை பல​னின்றி இறந்​தார்.​ இது​கு​றித்து ரேஸ்​கோர்ஸ் போலீ​ஸக்ஷ்​ருக்கு தக​வல் தெரி​விக்​கப்​பட்​டது.​

வி​டு​த​லைப் புலி​க​ளின் தலை​வர் பிர​பா​க​ரன் பெயரை பச்சை குத்தி இருப்​ப​தால்,​​ இலங்கை அக​தி​யாக இருக்க வாய்ப்பு இருக்​க​லாம் என்ற கோணத்​தில் உள​வுப் பிரிவு விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​ ​

இ​றந்​த​வ​ரின் புகைப்​ப​டத்தை கோவை​யில் உள்ள இலங்கை அக​தி​கள் முகாம்​க​ளில் தங்​கி​யுள்​ள​வர்​க​ளி​டம் காட்டி அடை​யா​ளம் காணும் முயற்​சி​யி​லும் போலீ​ஸக்ஷ்ர் ஈடு​பட்​டுள்​ள​னர்.​

இ ​றந்​த​வ​ரின் அடை​யா​ளம் தெரி​யா​த​தால்,​​ இவர் விடு​த​லைப் புலி​யாக இருக்​கக் கூடுமோ என்ற கோணத்​தி​லும் க்யூ பிரிவு போலீ​ஸக்ஷ்ர் விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.​

இ​து​கு​றித்து அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​க​ளி​டம் கேட்​ட​போது,​​ "சாலை​யில் நடந்து செல்​லும்​போது இவ​ருக்கு கடும் முடக்​கு​வா​தம் ஏற்​பட்​டுள்​ளது.​ அதன் கார​ண​மாக சுய​நி​னைவை இழந்​துள்​ளார்.​ அவ​ருக்கு தீவிர சிகிச்சை அளித்​தும்,​​ பல​னின்றி இறந்​து​விட்​டார்' என்​றார்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக