21 மே, 2010

பல்கலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: வோர்ட் பிளேஸில் சம்பவம்

கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று பிற்பகல் முதல் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி பொலிசார் பலர் குவிக்கப்பட்ட போதும் மாணவர்கள் அத்துமீறி மானியத்துக்குள் நுழைய முற்பட்ட போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவானதுடன் பொலிசாரால் மோதலை கட்டுப்படுத்த தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தொடர்ந்து அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக