20 மே, 2010

அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம்- ஜனாதிபதி பணிப்பு

அமைச்சர்கள் எவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பரவலாக பெய்துவரும் அடை மழை காரணமாக நடாளாவிய ரீதியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். எனவே ஒவ்வொரு அமைச்சரும் நாட்டில் இருந்து இவர்களுக்கான நிவாரண பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக