21 மே, 2010

முழு நிலத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த தினமே "வெற்றி நாள்" – அரசாங்கம்

முன்னாள் இராணுவ தளபதி இறுதிகட்ட யுத்தத்தின் போது நாட்டில் இருக்கவில்லை என்பதுடன் முழு நிலத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நாளே இராணுவ வெற்றி நாளாகும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெளிநாட்டிற்கு சென்றிருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா 17 ஆம் திகதி அல்லது 18 ஆம்திகதி அதிகாலையில் இலங்கைக்கு வருகைதந்தமையினால் வெற்றி நாள் தொடர்பில் அவரிடத்தில் குழப்பம் நிலவுகின்றது.

இறுதிக்கட்ட யுத்தம் அன்றிருந்த படைகளின் பிரதானியின் உத்தரவிற்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் பயங்கரவாதிகளிடமிருந்து முழு நிலப்பரப்பையும் கைப்பற்றிய தினமே இராணுவ வெள்ளி நாளாகும். இராணுவ படையணிக்கு கட்டளையிட்ட தளபதி மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா முழு நிலமும் 18 ஆம் திகதி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவித்தார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக