21 மே, 2010

நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் யாழ்.மேயரும் கணவரும் விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர மேயர் பற்குணராசா யோகேஸ்வரி மற்றும் அவரது கணவரும் செயலாளருமான பற்குணராசா ஆகிய இருவரையும் யாழ் நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து இன்று விடுதலை செய்தது.

நீதிமன்ற செயற்பாடுகளை அவமதிக்கும் வகையில் பத்திரிகையில் தகவல்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் வழங்கியிருந்ததுடன் இன்றைய தினம் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

அதன்பிரகாரம் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக