21 மே, 2010

2,000 மாஜி விடுதலை புலிகள்: இதுவரை ஒப்படைப்பு

கொழும்பு:"இதுவரை 2,000 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்' என, இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்தாண்டு மே மாதம், இறுதிக்கட்ட போர் நடந்தபோது மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தனர். இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சிறப்பு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டன. புலிகள் அமைப்பில் இருந்த சிறுவர்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பயிற்சி முகாம் முடிந்து, இதுவரை 2,000 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், யாழ்ப்பாணத்தில் நடந்த விழாவில் 400 முன்னாள் விடுதலைப் புலிகள், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக