21 மே, 2010

மீள்குடியேற்ற மக்களை 3 நாட்கள் சந்தித்த பின்னரே அறிக்கை வெளியீடு : ததேகூ

முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுடன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடியுள்ளனர். எனினும் மூன்று நாள் தொடர் சந்திப்பின் பின்னரே அது தொடர்பான முழுமையான அறிக்கையினை வெளியிட முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கொண்ட குழு தற்போது முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் நோக்கிச் செல்வதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு , வவுனியா மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்குழுவில் ஏனைய அரச, தனியார் நிறுவனங்கள் எதுவும் உடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக