20 மே, 2010

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்தை தவிர்த்து கொள்ளுங்கள்


கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியை போக்குவரத்துக்காக பயன்ப டுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்தியாவசியப் போக்குவரத்து தேவைகளுக்கு மாத்திரம் இந்த வீதியை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள சீதுவை மற்றும் அம்பன்முல்லை பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கனரக வாகனங்களை தவிர இலகுரக வாகனங்கள் இந்த வீதியின் ஊடாக செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடும் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கையில் பெருமளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக