20 மே, 2010

யாழில் தமிழ்த் திரைப்பட விழா : அரசு ஏற்பாடு

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்பட விழா ஒன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

யாழ் மக்களின் மனநிலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் பணிப்பின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை, அங்குள்ள பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.

இத்திரைப்பட விழாவில் தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்தன. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் பொழுது போக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக