2 மே, 2010

நடிகை ரஞ்சிதாவை கைது செய்ய போலீஸ் முடிவு?





: இரு முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ரஞ்சிதாவை கைது செய்து விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று டி.ஐ.ஜி. சரண் ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் கூறியதாவது:

÷நடிகை ரஞ்சிதா கர்நாடக போலீஸக்ஷ்ரைத் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. நித்யானந்தா குறித்து ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த அவருக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் அவரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

÷மேலும் அவரைத் தொடர்பு கொள்ள தமிழக போலீஸக்ஷ்ரின் உதவியையும் நாடியுள்ளோம். அப்படியும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.

÷உயர் அதிகாரிகள் உத்தரவிடும்பட்சத்தில் ரஞ்சிதா எங்கு இருந்தாலும் அவரைப்பிடித்து வந்து விசாரணை நடத்தத் தயங்க மாட்டோம்.

அதே சமயத்தில் நித்யானந்தா தொடர்பாக விசாரணை நடத்த தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று ரஞ்சிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியான சச்சிதானந்தாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். திங்கள்கிழமை அவரிடம் விசாரணை நடத்தப்படும். நித்யானந்தா பற்றிய முழு விவரம் அவருக்குத் தெரியும். எனவே அவரிடம் நடத்தும் விசாரணையில் சில தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

நித்யானந்தா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவரிடம் இன்னும் சில வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியது உள்ளன. மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

÷இதுதொடர்பாக வழக்கை விசாரித்துவரும் ராம்நகர் மாவட்ட நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக