2 மே, 2010

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில் கைதான 110பேரும் விடுதலை-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமானபோது கைதுசெய்யப்பட்ட 110பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தொடர்பாக குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இவர்களுக்கு தலா 20ஆயிரம் ரூபா அபராதத்தையும், 06மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் மாத்தறை பிரதம நீதவான் விதித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் நோக்கில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்பட்டபோது காலி கடலில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக