5 ஏப்ரல், 2010

தாக்கப்பட்ட மாவோ பிரதேச சபைத் தலைவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதி


நேற்றிரவு பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாவோ பிரதேச சபை தலைவர் பந்துல புஸ்பகுமார தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியளவில் மாவோ பளல்ல என்ற இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோவின் ஆதரவாளர்களே இவர்மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, புஸ்பகுமாரவின் வாகன சாரதியும் தாக்கப்பட்டுப் பலத்த காயங்களுக்குள்ளானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக