5 ஏப்ரல், 2010

ஆஸி.,யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்


பிரிஸ்பேன் ரயில் நிலையத்தில் இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பது கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது. சிலர், இனவெறியோடு இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் ரயில் நிலைய நடைபாதையில் ரயிலுக்காக காத்திருந்த நரேந்தர் குமார் படேல்(34) என்ற இந்தியரின் கழுத்தில், அடையாளம் தெரியாத நபர் கத்தியால் காயப்படுத்தியுள்ளார். கத்தி, கழுத்தில் ஆழமாக பதியாத காரணத்தால், நரேந்திர் குமார் உயிர் பிழைத்துள்ளார்.இத்தாக்குதலை நடத்தியதாக கருதப்படும் 26 வயது நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த நபர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். இந்த செய்தியை, 'கூரியர் மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த இந்த தாக்குதல், ரயில் நிலைய ரகசிய கேமராவிலும் பதிவாகியுள்ளது. ஆனால், இச்சம்பவத்தை போலீசார் மூடி மறைத்து விட்டதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக