5 ஏப்ரல், 2010

ஆதரவாளர்கள் மறுப்பு: புதிய கட்சி தொடங்க முஷரப்புக்கு சிக்கல்





பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தற்போது லண்டனில் தங்கியுள்ளார். விரைவில் அவர் பாகிஸ்தான் திரும்ப உள்ளார். அங்கு தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருந்தார். அதற்கு வசதியாக புதிய கட்சி தொடங்க திட்டமிட்டிருந்தார். அக்கட்சிக்கு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம்லீக் என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-கியூ கட்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். புதிய கட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் வருகிற 12-ந்தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த முஷரப் ஏற்பாடு செய்திருந்தார்.

அதில், அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அவர்கள் முஷரப்புக்கு ஆதரவளிக்க தயங்குகின்றனர். முஷரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அமீர், சுமேராமாலிக், முகமதுஅலி முரானி, சையத் பைசல், சலேஹயத் மார்விமேமன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.

எனவே புதிய கட்சி தொடங்குவதில் முஷரப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக