5 ஏப்ரல், 2010

மன்னாரில் நடந்த ததேகூ பிரசாரக் கூட்டங்கள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்று மன்னாரில் இடம்பெற்றன.

பலத்த மழைக்கு மத்தியில், இன்னிசை நிகழ்வுகளுடன் சால்வுபாத கிராமத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தை, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பலர் களைக்க முனைந்தனர்.

இதனையடுத்து மன்னார் சால்வுபாத கிராமத்தில் சற்று நேரம் பதற்ற நிலை காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மற்றும் புதிய வேட்பாளர்களான, சூசைநாதன், சிராய்வா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியதாகவும் பலத்த சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக