15 மார்ச், 2010

ஜப்பான்,​​ இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

:

டோக்கியோ, ​​ மார்ச் 14: ஜப்பான் மற்றம் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.​ ஜப்பானில் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே 250 கி.மீ தொலைவில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள புக்ஷிமா பகுதியில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.​ இந்த நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவு கோலில் 6.6 அலகாக பதிவானது.​ ​

​ ​ ​ இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் இருந்ததாக ஜப்பானிய நிறுவனங்கள் தெரிவித்தன.​ ஆனால் 26.6 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.​ ​

​ ​ ​ இந்த நில நடுக்கத்தால் அலைகளின் உயரம் சற்று அதிகரித்துக் காணப்படும் என்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டது.​ நிலநடுக்கத்தையடுத்து பறக்கும் ரயில் சேவைகளும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.​ பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.​ ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் எச்சரித்தன.​ ​ ​ ​

இந்தோனேஷியா: ​​ இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.​ ரிக்டர் அளவு கோலில் இதன் வீச்சு 7 அலகாக பதிவானது.​

கடலுக்கு அடியில் 56 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

​ ​ ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலுமே உயிரிழப்போ,​​ உடைமைகளுக்கு சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக