15 மார்ச், 2010

சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை நாளை





முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை நாளை 16ம் திகதி ஆரம்பமாகிறது. முதலாவது இராணுவ நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய முதல் அமர்வின்போது மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை, 2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை ஆகிய இரண்டு பிரதான வகையிலான விசாரணைகளை முன்னெடுக்கவே இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும், 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய அமர்வின்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின்போது நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும், அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ. பி. ஜயலதிக்க ஆகியோரும், நீதிபதி அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னான்டோவும் செயற்பட வுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக