15 மார்ச், 2010

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு கல்வித்துறையை மேம்படுத்த அதிக அக்கறை




ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க
மொழிப் பயிற்சிக்கான விசேட ஜனாதிபதி செயலணிக் குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் திட்டம் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது. இத் தேசியத் திட்டத்தின் முதற் கட்டமாக கொழும்பு ரோயல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான பத்து நாள் வேலைத் திட்டம் நேற்று ரோயல் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப் பட்டது.

ஆங்கில மொழிப் பயிற்சிக்கான விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவும் கல்வியமைச்சும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆங்கில மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் இணைப்பாளர் சுனிமல் பெர்னாண்டோ, கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்திய ஹைதராபாத் மொழியியற்துறைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களினால் இப் பயிற்சிகள் நடாத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க :- கல்வித்துறை முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகிறது. குறிப்பாக வாழ்க்கைத் திறனு க்கான ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் தொடர்பாடல்களுக்கென விசேட திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருவதுடன் இதற்கென விசேட ஜனாதிபதிச் செயலணி யொன்றும் அமைக்கப்பட்டு அதனூடாக பல திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத் திற்கும் குறிப்பாக ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் தொடர்பாடல் மேம்பாட்டு க்காக இந்திய அரசாங்கம் பெரிதும் உதவி வருகின்றது. இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியத் தூதுவருக்கும் பேராசிரியர்களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்க கடமைப்பட் டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக