15 மார்ச், 2010

இலங்கையில் ஜனநாயகம் என்பதே கிடையாகது : முன்னாள் பிரதம நீதியரச







இலங்கையில் மாற்றுக்கருத்துக்களுக்கோ கருத்துவெளியிடும் சுதந்திரத்திற்கோ இடமில்லை ஜனநாயகக்கட்டமைப்பென்றேதும் கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.

கொழும்பிலுள்ள நட்டத்திர விடுதியில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத்தெரிவித்தார் யுத்தம் நிறைவடைந்து விட்ட நிலையில் யாருக்கு எதிராகவும் யுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனக்குறிப்பிட்ட பிரதம நீதியரசர் யார் மீதும் நம்பிக்கையீனம் கொள்ளத்தேவையில்லை என சுட்டிக்காட்டினார்

இலங்கை ஜனநாயகம் தாரண்மை(லிபரல் ) மற்றும் மனித உரிமைகளில் நம்பிக்கை கொண்ட நாடு என உலகிற்கு எடுத்துணர்த்த வேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளதா?என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதம நீதியரசர்,

இது காலகட்டத்தில் படிப்படியாக நடந்துள்ளது.என்ன நடந்ததென்றால் நாம் யுத்த நிலைமைக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது இங்குள்ள இளைஞர்களில் பலர் அவசரகாலச் சட்ட நிலைமைக்குள்ளேயே பிறந்துள்ளனர் இதனைக்கூறவேண்டியதையிட்டு நான் கவலைகொள்கின்றேன் 1970களில் இருந்து அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது அதாவது கடந்த நாற்பது வருடங்களாக அவசரகாலச்சட்டத்தை நாம் முகங்கொடுத்துவந்துள்ளோம்.இதனால் இங்குள்ளவர்களில் பலருக்கு சாதாரண சட்டங்கள் என்னவென்பதே தெரியாது.

நாம் இந்த நிலையிலிருந்து வெளிவரவேண்டும்.தற்போது யுத்தம் நிறைவடைந்துவிட்டது நாம் யாருக்கெதிராகவும் யுத்தம் செய்யவேண்டிய அவசியம் கிடையாது எவரையும் சந்தேகித்து நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.தற்போது திறந்தமனத்துடன் செயற்படுவதற்கான தருணம் என்றே நான் காண்கின்றேன் நாம் ஜனநாயகவாதிகள் தாராளமயமானவர்கள் நாம் மனித உரிமைகளை மதித்து நடப்பவர்கள் என உலகிற்கு காண்பிப்பதற்கான தருணம் இதுவாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக