8 மார்ச், 2010

ஆஸியில் அகதிகளுடன் இரு படகுகள் பறிமுதல்

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு அடேல் தீவுக்கு அருகில் 28 அகதிகளுடன் சென்ற படகினை அந்நாட்டுக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் 80 பேரை ஏற்றிய படகு ஒன்றும் அந்தப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஜுலியா கில்லர்ட், அவர்கள் அனைவரும் மோதலின் பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறிய அகதிகள் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற கடுமையான யுத்தம், மற்றும் அங்கு காணப்படுகின்ற ஏற்பில்லாத சூழ்நிலைகளே அகதிகளின் வருகைக்கான முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் கட்டுமான வசதிகள் அதிகரிக்கும் பட்சத்தில், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை அகதிகளின் வருகை குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் படகுகள் இரண்டும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தற்போது அகதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிறிஸ்மஸ் தீவை விஸ்தரிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக