8 மார்ச், 2010

இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு



இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு கோபுரம் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து விரைவில் அப்பகுதி மக்களுக்கு தொலைக்காட்சி வசதி மீண்டும் கிடைக்கும் என இலங்கை அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இறுதி கட்ட போரின் போது விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்த கோபுரம் சீரமைக்கப்பட்டால் வட பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிக்கு ராணுவமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது' என அந்த அறிக்கை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக