5 ஜூன், 2011

மற்றுமொரு ஐ.நா பிரதிநிதிக்கு தடைவிதித்துள்ளது இலங்கை

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ இலங்கை வருவதற்கான அனு மதியை இரண்டாவது தடவையாகவும் அர சாங்கம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூவை இலங்கைக்கு அழைத்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, உட்பட காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கூடிய இந்த அமைப்புகள் எடுத்துள்ளன. 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சுதந்திரமான கருத்துக் கூறல் பரிவர்த்தனை அமைப்பு ஐணசிஞுணச்சிடிணிணச்டூ ஊஞுஞுஞீணிட் ணிஞூ உதுணீஞுண்ண்டிணிண உதுஞிடச்ணஞ்ஞு (ஐஊஉஙீ) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புதிய புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு இலங்கை வரும் இந்தியக் குழு

இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசி யல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் ரி.கே. நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.

கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இந்த உயர்மட்டக் குழுவினர் தீர்க்கமாக ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வெடிபொருள் மீட்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களால் சில பொருள்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டில் வெடிபொருள், கண்ணிவெடி அபாயமற்ற பகுதிகளென கூறப்பட்டு, மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் வெடிபொருட்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்திகரமான வகையினில் கண்ணிவெடியகற்றல் பணிகள் இடம்பெற்றதாவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் சில, கடந்த நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவன களப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக பாடசாலை சூழலினுள்ளும் பனை மரத்திலும் கூட இவ்வாறு வெடிக்காத எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்மராட்சியின் தனங்கிளப்பு, கோயிலாக்கண்டி மற்றும் மிருசுவில், எழுதுமட்டுவாள் பகுதிகளில் இவ்வாறு வெடிபொருட்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றமை தொடர்பாக, தகவல்களை வழங்க பொதுமக்கள் பின்னடித்தே வருகின்றனர். இதனை காரணங்காட்டி, தம்மை அங்கிருந்து மீண்டும் வெளியேற்றிவிட படைத்தரப்பு முனையலாமென அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். வடமராட்சி கிழக்கிலும் அதே போன்று தென்மராட்சி மற்றும் பளை பகுதிகளிலும் கண்ணிவெடி அபாயத்தை காரணங்காட்டி பல கிராமங்களினில் இதுவரை மீள் குடியமர்வதற்கான அனுமதி படைத்தரப்பினால் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்'.



இது ஒரு தனிமனித புகழ்ச்சியல்ல. எழுதவேண்டிய ஒன்றை எழுதவேண்டிய நேரத்திலேயே எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்ற குறிப்பு இது.
நேயல் நடேசன் என்ற எழுத்தாளர் ஒருவரை அவரது எழுத்துக்கள் ஊடாக சந்தித்திருக்கின்றேன்.
பின்னர் அவரது கட்டுரைகள் ஊடாக அவரது சமூக அக்கறையை கண்டிருக்கின்றேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவர்களின் வரலாற்றை எழுதியவர் டாக்டர் நோயல் நடேசன். அப்படி இவர் எழுதுகின்றபோதெல்லாம், பூனைகளையும் நாய்களையும் வெட்டுகின்ற ஒரு மிருகவைத்தியர் தேவையில்லாமல் அரசியல் பேசுகின்றார் என்று என்னுள் நினைத்ததுண்டு.
ஆனால் புலிகளின் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று அவர் முன்னரே எழுதியது அப்படியே நடந்தபோது ஆச்சரியமாகவும் இருந்தது.
2009 மார்ச் மாதத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இருபதுபேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள நிலைமைகள் குறித்து அவர்கள் தெரிந்துகொள்ள வைக்கப்பட்டபோது, அவரை நேரில் சந்திக்க முடிந்தது.
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ அந்தந்த வழிகளில் உதவ விரும்பும் பலநூறு தமிழர்களில் ஒருவராக அவரை அப்போது பார்க்கமுடிந்தது.
இவ்வளவு விரைவாக யாழ். மண்ணில் கால்பதிக்க தன்னால் முடியும் என்று அவரே நினைத்திருப்பாரோ தெரியவில்லை.
மே 18க்கு பின்னர் தமது மண்ணில் முதல்தடவையாக அவர் கால்பதித்தபோது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் நான் பகிர்ந்துகொண்டிருக்கின்றேன்.
பாதிக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுத்த பலரை பார்த்திருக்கின்றேன். மற்றவர்கள் இந்த மக்களுக்கு உதவவேண்டும் என்று எழுதிய பலரை, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்ற பலரை கண்டிருக்கின்றேன்.
ஆனால் அப்படி எழுதுவதுடன் நின்று விடாமல், செய்தும் காட்டியவர்கள் ஒரு சிலர்தான்.
தான் பிறந்த சிறிய தீவான எழுவைதீவு கிராமத்திற்கு அவர் நீண்டகாலத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு சென்றபோது, அவரை அவரது கிராமத்தவர்கள் வரவேற்றனர்.
'இந்தக் கிராமத்திற்கு நான் எதையாவது செய்யவேண்டும், உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுவது என்ன?' என்று அவர் கிராமத்தவர்களை பார்த்து கேட்டபோது, அவர்கள் தயங்காமல் சொன்னது, 'எமக்கு அவசரம் தேவைப்படுவது ஒரு ஆஸ்பத்திரிதான். ஆதற்காக நாங்கள் ஒரு காணியை வாங்கவிருக்கின்றோம் நீங்கள் காணியை வாங்குவதற்கு பணஉதவி செய்யவேண்டும்' என்று அந்தக் கிராமத்து மீனவர் சங்கத்தினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர் எந்தவித தயக்கமோ அல்லது யோசனையோ இல்லாமல் அவர்களுக்கு சொன்னது, 'நீங்கள் காணியை வாங்குங்கள். நான் ஆஸ்பத்திரியை கட்டித்தருகின்றேன்.'.
கிராமத்தவர்கள் கூட அதனை நம்பியிருப்பார்களோ தெரியவில்லை.
ஆனால் அவர் எழுவைதீவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியதும், கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தொடக்கியது ஆச்சரியமாக இருந்தது.
ஆஸ்பத்திரிகளைக் கட்டிக்கொடுக்கத்தானே அரசாங்கம் இருக்கின்றது. இந்த மனுசனுக்கு ஏன் தேவையில்லாதவேலை என்று என்னுள் நினைத்ததையும் இப்போதாவது பதிவுசெய்யத்தான் வேண்டும்.
கடந்த திங்கள் கிழமையன்று (மே 30) ஆஸ்பத்திரி கட்டிடத்தை முழுமையாக கட்டி அரசாங்கத்திடம் கையளித்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
சுமார் ஒரு கோடி செலவில் (கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியபோது 50 லட்சத்தில் கட்டி முடிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது 70, 80 என்று அதிகரித்து கட்டி முடிக்கப்பட்டபோது 100 ஆகிவிட்டது) கட்டிமுடிக்கப்பட்ட இந்த பணிக்கு கனடாவில் வாழும் எழுவைதீவு கிராமத்தவர்கள் சிலர் 4 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர். மிகுதிப் பணம் முழுவதையும் இவரது குடும்பமே செலவிட்டிருக்கின்றது.
மிகச்சிறப்பாக, எளிமையாக நடந்த அந்த வைபவத்தில் அவர் பேசியதைக் கேட்டபோது இத்தகைய ஒருவரின் நட்புவட்டத்திற்குள் இடம்பிடித்ததை நினைத்தபோதே ஒரு நெகிழ்ச்சியாக இருந்தது.
தனது சிறுபராயத்தில் இந்தக் கிராமத்தில் தான் வாழ்ந்தபோது, தனக்கு வருத்தம் வருகின்றபோது, தன்னை தனது தாயார் பக்கத்து தீவுகளுக்கு வைத்தியச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்ற கஸ்டங்களை நினைவுகூர்ந்த அவர், அந்த கஸ்டங்களை இன்றும் தனது கிராமத்தவர்கள் அனுபவிப்பதை எண்ணிப்பார்த்திருக்கின்றார்.
வழியில் நாம் நடந்துசெல்லும்போது கல் ஒன்று நமது காலில் இடித்துவிடுகின்றது. கால் விரலில் காயம். நாம் என்ன செய்கின்றோம். நமக்கு காலில் அடித்த கல்லை எடுத்து ஒரு கரையில் போட்டுவிடுகின்றோம். காலில் அடித்த கல் நமக்கு மீண்டும் அடிக்கப்போவதில்லை, ஆனாலும் அது மற்றவர் காலில் அடித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக்கல்லை எடுத்து கரையில் போடுகின்றோம்.
அதுபோலத்தான் இந்த ஆஸ்பத்திரியை நான் கட்டியதும் என்று நடேசன் அங்கு உரையாற்றியபோது கூறியது பலரையும் சிந்திக்கவைத்தது.
தமிழ் மக்களின் அவலங்களை காட்சிக்கு வைத்து பணம் பார்த்த பலர் இன்று அந்தப்பணத்திற்காக தத்தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். பல லட்சம் கோடி சொத்துக்களுக்காக இவர்கள் தமக்குள் மோதிக்கொண்டிருக்கின்றனர். யாரைக் காட்டி, யார் துயரங்களைக் காட்டி மக்களிடம் பணம்பார்த்தார்களோ அந்த மக்கள் இன்னமும் தமது எதிர்காலத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றை விமர்சிப்பவராக மாத்திரம் இல்லாமல், தனது கடமையை செய்யவேண்டிய நேரத்தில் செய்து காட்டிய நோயல் நடேசன், ஆஸ்பத்திரி திறப்புவிழாவை முடித்துக்கொண்டு எழுவைதீவை விட்டு வெளியேறியபோது, அந்தத் துறைமுகத்தில் காவல் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் கூறிய வார்த்தைகளைத் தான் என்னாலும் இப்போது கூறமுடியும்.
'இந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்'.-

எஸ்.எஸ்.குகநாதன்
மேலும் இங்கே தொடர்க...

28 மே, 2011

நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை 5 பேர் பலி; பெருமளவானோர் பாதிப்பு



நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தினாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரு குழந்தைகளும் அடங்குவர்.

கேகாலை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் பல பகுதிகளிலுள்ள வீதிகள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு இடம்பெற்ற மண்சரிவில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்மீது மண்மேடு இடிந்து விழுந்ததனாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனமழையினால் களுகங்கை, களனிகங்கை, நில்வள கங்கை மற்றும் கிங்கங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்கள் தொடர்ந்தும் உயர்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, கொட்டியாகும்புற படகல்தெனிய வீதி நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 20 வீடுகள் பகுதியளவில் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகவும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் தவளம மற்றும் கினிதுமை ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக இதுவரை 450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென்று வானிலை அவதான நி>லையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுநீரக சிகிச்சைக்காக ரஜினி சிங்கப்பூர் பயணம்




சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தக வல்கள் வெளியாகி யுள்ளன.

ரஜினிகாந்தின் பயணம் தொடர்பில் பல்வேறுபட்ட குழப்பகரமான தகவல்கள் வெளியாகின. அவரின் பயண திகதிகள் திடீர் திடீரென மாற்றப்பட்டன. மேலும் லண்டன், செல்லவுள்ளதாகவும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் பின்னர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியான அம்புலன்ஸ் விமானம் ஒன்றில் அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ரஜினிகாந்தை சிங்கப்பூரிலுள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் சிங்கப்பூர் என்ற மருத்துவமனையில் சேர்க்கவும் குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மேலதிக சிகிச்சைக்காக மனைவி, மகளுடன் இன்று (27-05-2011) இரவு 11 மணிக்கு ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சிறுநீரக சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளிநாடு செல்கிறார்.

சிறுநீரக பாதிப்புக்கு விரைவான சிகிச்சை பெறுவதற்காக, ரஜினிகாந்த் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்கிறார். முதலில் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இப்போது அவருடைய பயண திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை 29 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளிநாடு புறப்படுவார். இதற்காக அம்புலன்ஸ் போன்ற தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந் நிலையில் ரஜினிகாந்த் பூரண குணம் அடையவேண்டி, அவருடைய ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் விசேட பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தி வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் பால்குடம் விளக்கு பூஜை, பால் அபிஷேகம், மண் சாப்பாடு, 101 பேர்களுக்கு அன்னதானம் ஆகியவற்றிலும் ஈடுபட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை




* நாட்டு மக்களின் அனுமதியின்றி வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை.

* பிரிவினைவாதிகள், இனவாதிகள் கேட்கின்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை.

லோரன்ஸ் செல்வநாயகம்

வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நேற்றையதினம் காலிமுகத் திடலில் நடைபெற்ற படைவீரர்களின் வெற்றிவிழா வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற் றுகையில், உலகத்தில் மிகக்கொடூரமான பயங்கரவாதிகளைத் தோல்வியுறச் செய்து, தாய்நாட்டை ஐக்கியப்படுத்தியதன் பின்னர் இன்று பெருமிதத்துடன் எம்மால் தேசிய கொடியை ஏற்றிவைப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

தமிழ், முஸ்லிம், சிங்கள அனைத்து இனங்களுக்கும் உயிர்வாழ்வதற்கு இருக்கின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்ற வெற்றிவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அதேபோன்று பணயக் கைதிகளாக அடைபட்டுக்கிடந்த இலட்சக்கணக்கான வடபகுதி மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்த மாபெரும் வெற்றியாகும்.

அரசியலமைப்பில் மனித உரிமைகளைச் சேர்த்து அதை அங்கீகரித்து உலக மக்களுக்கு பறைசாற்றுவதன் மூலம் இந்த நாட்டில் மனித உரிமை மக்களுக்குக் கிடைத்துவிடமாட்டாது. வாழ்வதற்கு இருக்கும் உரிமையை எவரேனும் பறித்துக்கொள்வாராக இருந்தால் அதைத் தடுப்பதன்மூலமும், அதிலிருந்து மக்களை விடுவிப்பதன் மூலமும் மாத்திரமேதான் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அதனால் நாட்டு மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தியதை முன்னிட்டே இந்த வெற்றிவிழாவை நாம் கொண்டாடுகின்றோம்.

நாங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று கடந்துபோன இரண்டு ஆண்டுகளை நாம் திருப்தியுடனும், பெருமிதத்துடனும் திரும்பிப் பார்க்க முடியும்.

நாம் புதிய இலங்கை வரைபடமொன்றை உருவாக்கும் அளவுக்கு அபிவிருத்திப் புரட்சியொன்றை இந்நாட்டில் மேற்கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். படைவீரர்கள் விடுவித்த வடக்கும், கிழக்கும் கஸ்டமான வாழ்க்கைக்குப் பதிலாக ஆடம்பரவாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.

எல்லைக் கிராமங்களை இலங்கை வரைபடத்திலிருந்து எடுத்து எறிந்த நாம், இப்போது அகதிகள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றி எமது அகராதிகளிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும் யுகமாகும்.

இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்திருந்த மக்களை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்துத்தான் மீளக்குடியம ர்த்தியிருக்கிறோம். இவ்வாறு வடக்கு, கிழக்கை மீண்டும் கட்டியெழுப்பியமை வரலாற்றில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திப் பணியென்றுதான் நான் நம்புகின்றேன்.

சுதந்திரத்தின் ஒளிக்கீற்று படரத் தொடங்கியவுடன் அந்த ஒளிக்கீற்று வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் இவ்வாறு துரிதகதியில் கட்டியெழுப்புவதை பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்து என்பதை குறிப்பிடவேண்டும். பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும் கட்டியெழுப்புகின்றபோது வெளிநாடுகளிலிருந்து பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் என்னசெய்தார்கள் என்பதை உலக மக்கள் அறிவார்கள்.

முள்ளிவாய்க்காலில் கடைசிப் பயங்கரவாதத் தலைவன் இறந்ததையடுத்து மே மாதம் 19ஆம் திகதி இந்த நாடு ஐக்கியப்பட்ட நேரத்திலிருந்து வெளிநாடுகளிலிருக்கின்ற இவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். நன்கொ டைகளை சேகரிப்பதையும், கடத்தல் வேலைகளை செய்வதையும் பயங் கரவாதிகள் நிறுத்தவில்லை.

யுத்தம் நடைபெற்ற யுகத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு, கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு செலவுசெய்த பணம் அவர்களிடம் குவிந்து கிடந்தது. குவிந்து கிடந்த பணத்தைக்கொண்டு இலங்கைக்கு எதிராக பாரிய அளவில் பொய்ப் பிரசார இயக்கங்களை, சதி செயல்களை இன்னும் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைந்தாலும் வெளிநாடுகளில் குடியேறியிருக்கின்ற பயங்கரவாதிகளும், அவர்களுடைய நண்பர்களும் இன்னும் நமது நாட்டை அழிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருக்கின்ற அவர்கள் அந்நாடுகளில் இருக்கின்ற ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தையும், கிடைத்துள்ள வாக்குரிமையையும் பயன்படுத்தி அந்நாடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இரகசியம் அல்ல.

ஒரு நாட்டில் முதலில் சத்தியத்தை சுட்டுக்கொன்றுவிட்டுத்தான் பயங்கரவாதம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் பின்னரும் புலிகள் சத்தியத்தை சுட்டுக்கொல்லத் தொடங்கினர். அதன் விளைவாக எமது படைவீரர்களுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை எழுதுவதற்கு தேவையான சதி செயல்களை ஆரம்பித்தனர்.

எமது படையினர் ஒரு கையில் படைக்கலங்களையும் மற்றக்கையில் மனித உரிமை சாசனத்தையும், தோளில் நிர்க்கதியானவர்களுக்குக் கொடுக்கின்ற உணவுப் பக்கற்றையும், இதயத்தில் பிள்ளைப் பாசத்தையும் சுமந்துகொண்டு போராடினார்கள்.

பயங்கரவாதத் தலைவன் முள்ளிவாய்க்காலில் இறந்ததன் பின்னர் அவருடைய தாயும் தந்தையும் தொடர்ச்சியாக எங்களுடைய பாதுகாப்பைப் பெற்றனர். அவர்களை துப்பாக்கித் தோட்டக்களிலிருந்து காப்பாற்றி தூக்கிக்கொண்டுவரும் அளவுக்கு படைவீரர்களது இதயம் இழகியிருந்தது என்பதை நாம் அறிவோம். இன்னும் கூட எங்களிடம் சரணடைந்து இருக்கின்ற பயங்கரவாத தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எமது பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

எங்களுக்கு எதிராகப் போராடிய பயங்கரவாதிகளுக்கும் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை அனுப்புக்கொண்டு போராடிய ஒரே இனம், ஒரே நாடு நாம்தான். வேறுநாடுகளில் மோதல்கள் இடம்பெறும் தன்மையைப் பார்க்கின்றபோது நமது மனிதாபிமான நடவடிக்கையிலிருந்து ஆழமான மனித நேயத்தை எண்ணி பெருமை கொள்கின்றோம்.

படைவீரர்களே! போர்க்களத்தில் உங்களுடன் எங்கள் இதயங்கள் இருந்தன. முழு நாடுமே உங்களோடு இருந்தது. இன்றும் அப்படித்தான். உலகத்தின் முன்னால் உங்களைக் காட்டிக்கொடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்தவேண்டும். மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்ததன் பின்னர் உங்களை பாசறைக்குள் வரையறுத்து வைக்கவில்லை. எமது நாட்டை கட்டியெழுப்புகின்ற பாரிய பணியில் உங்களையும் பங்காளிகளாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

வெளிவிவகார சேவையிலிருந்து கொழும்பை அழகான நகரமாகக் கட்டியெழுப்பும் பணிவரைக்கும் பல விடயங்களில் படைவீரர்கள் பங்களிப்புச் செய்தனர் என்பதை நாம் அறிவோம். அன்று யுத்த களத்திலே இரத்தம் சிந்திய நீங்கள் இன்று நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்தளத்திலே வியர்வை சிந்துகிஹர்கள். அதுமாத்திரமல்ல உங்களிடம் இருக்கின்ற ஒழுக்கம் அர்ப்பணிப்பு, துணிச்சல் என்பவற்றையும் தாய்நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கேட்கின்றனர்.

நாம் உலகத்துக்குக் காட்டவேண்டிய உண்மை இருக்கின்றது. நாம் உருவாக்கியிருப்பது நாடுகளை முற்றுகையிடுகின்ற முப்படையல்ல, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற ஒரு முப்படையாகும்.

நண்பர்ளே! தாய்நாட்டின் சுதந்திரத்தில் பாதம் பதிக்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் நமக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த மாபெரும் வீரர்கள் இம்மண்ணில் உறங்குகின்றனர் என்பதை நாங்கள் கெளரவாக நினைவுகூரவேண்டும். கண்களை, உடலின் பாகங்களை, இரத்தத்தை நாட்டுக்காகத் தியாகம்செய்த வீரர்கள் நம்மத்தியில் இருக்கின்றனர் என்பதை கெளரவமாக நினைவுகூருகின்றோம். படைவீரர்களே நீங்கள் செய்த உன்னதமான தியாகத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமானால் தேசிய ஒற்றுமையுடன் உன்னதமான எதிர்காலத்தை இவ்வனைத்து மக்களுக்கும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

நாம் வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை மனிதாபிமான உரிமைகளை உறுதிப்படுத்தி ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு பெற்றுக் கொடுத்த இடைக்கால பரிந்துரைகளை ஏற்கனவே நாம் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதன் இறுதி அறிக்கை தொடர்பாக இந்நாட்டு மக்களும் எமது அரசாங்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

ஆனால் பிரிவினைவாதிகள் அல்லது இனவாத குழுக்கள் கேட்கின்றவற்றை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. இந்நாட்டு மக்களுடைய அங்கீகாரம் இல்லாததால் வெளிநாடுகளைக் கொண்டு நிர்ப்பந்தித்து தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் குறி பார்க்கின்றனர் என்பது இரகசியம் அல்ல.

ஆயினும் எந்தவொரு அதிகாரமுடையவருக்கும் இந்நாட்டு மக்களின் சம்மதமும் அங்கீகாரமும் இன்று எதையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நான் தெரிவிக்கின்றேன். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை மற்றவர்கள் தீர்க்க முடியாது. எம்மால் அதை செய்ய முடியும் என்பதை உலகத்திற்கு நாம் காட்டி இருக்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மக்களுக்கு கிடைத்த நிவாரணம் என்ன என்று கேட்கின்றவர்களுக்கு வடக்கைப் போன்று முழு நாட்டையும் கை நீட்டி சுட்டிக்காட்ட முடியும். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 6.8 வீதமாகும். ஆனால் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 8 வீதமாகும். வடக்கில் அபிவிருத்தி வேகம் நூற்றுக்கு 14.2 வீதமாகும். அதே போன்று தொழில் இல்லா தன்மையையும் குறைத்துக் கொள்ள முடிந்தது. டொலரின் பெறுமதியை நிலையாக வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.

எமது எதிர்கால சவாலை வெற்றிக் கொள்வதற்கு இருக்கின்ற சிறந்த வழி நாட்டில் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாகும். எமது நாட்டு மக்களிடையே உன்னதமான தேசிய ஒற்றுமை இருக்கின்றது. இனங்களுக்கிடையே மோதிக் கொள்கின்ற தன்மை தற்பொழுது எந்த இடத்திலும் இல்லை. இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாபெரும் வெற்றிவிழா எந்த இனத்திற்கும் மன வேதனையை ஏற்படுத்தாத விதத்தில் கொண்டாடப்பட்டது.

ஆடிவேல் விழா நடைபெறுகின்ற போது சிங்கள மக்கள் பெரும் விருப்பத்துடன் அதில் கலந்து கொண்டனர். சிங்கள பெளத்த மக்கள் சம்புத்த ஜயந்தியை கொண்டாடுகின்ற போது வடக்கு வாழ் மக்களும் அதில் கலந்து கொள்கின்றனர். அனைத்து இன மக்களும் வாழ்கின்ற கொழும்பில் வெசாக் பண்டிகையை கொண்டாடுகின்ற போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுகளுமின்றி அதில் கலந்து கொண்டனர்.

மக்கள் அந்தந்த இனங்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த பிணைப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும்.

அப்படியின்றி பழைய புண்ணைக் கிளறிக்கொண்டு, கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் தோண்டிக் கிளறி இனங்களுக்கிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துவதனால் எந்தப் பயனும் கிட்டாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் தெரிவிக்கின்றேன். வாழ்கின்றபோது இனங்களுக்கிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற அந்த உன்னதமான பிணைப்பை பாதுகாப்பது நாட்டின் சுதந்திரத்தையும் இந்த மாபெரும் வெற்றியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.

படைவீரர்களே மாலை நேரங்களில் குழந்தை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் சென்று மரங்களுக்கடியில் மரணபயத்துடன் வாழ்ந்த மக்கள் இன்று தங்களுடைய சொந்த வீட்டில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்க்கும்போது எம் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.

தற்கொலை, கடற்புலி படகுகள் சென்ற சமுத்திரத்தில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கின்றபோது நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்செய்கின்றபோது பயங்கரவாதிகள் அழித்த பாலங்கள், மதகுகள், புகையிரதப் பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றை மீளக்கட்டியெழுப்புகின்றபோது கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், வாவிகள், அணைகள் என்பவை கட்டியெழுப்பப்படுகின்றபோது விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள் கட்டப்பட்டு கீதங்கள், தேவாரங்கள், பிரார்த்தனை ஒலிகள் காதுகளுக்குக் கேட்கின்றபோது உங்களுடைய தியாகம் வீணாகவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

சயனைட் வில்லையை கழுத்தில் கட்டிக்கொண்டு ரி-56 ரகத் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு இருந்த பிள்ளைகள் வெள்ளைச் சீருடையணிந்து பாடசாலைகளுக்குச் செல்கின்ற காட்சியைப் பார்க்கின்றபோது நீங்கள் செய்த தியாகம் வீணாகவில்லையென்பதை உங்களுடைய இதயத்திலிருந்து வருகின்ற வெற்றி உணர்வுகளினால் நிறைவடையும்.

தாய் நாட்டை சுதந்திரத்தின் மகிழ்ச்சியில் உயர்த்திவைப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அனைவருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவருடைய பாராட்டும் உரித்தாகும். உங்களுடைய அர்ப்பணிப்பை எந்த சந்ததியும் இதய பூர்வமாக மறந்துவிடாது என்பதையும், நீங்கள் என்றும் எம் நினைவில் நிலைத்து நிற்பீர்கள் என்பதையும் நான் ஞாபகப்படுத்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

27 மே, 2011

ஈரானில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொலை, பாலியல் வல்லுறவு ,கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

ஈரானின் டெஹ்ரானில் உள்ள ஷிராஸ் நகரில் வைத்தே நேற்று இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அந்நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனையே வழங்கப்பட்டு வருகின்றது இதுவும் பல சமயங்களில் பொது மக்கள் முன்னிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.

ஈரானின் இக் கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் ‌தெரிவித்துள்ள போதிலும் தமது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு இத்தகைய தண்டனைகள் அவசியமென ஈரான் தெரிவிக்கின்றது. இதேவேளை நேற்று மேலும் 7 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானில் இவ்வருடத்தில் 143 பேருக்கு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் அங்கு 179 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாகவும், சீனாவிற்கு அடுத்ததாக அதிகப்படியான மரணதண்டனைகள் இங்கேயே நிறைவேற்றப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

தூக்குமேடையில் ஏற்றி அலுகோசு கயிறை இழுத்தாலும் கண்ணீர் மல்கேன்: பொன்சேகா

சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்றினாலோ எனது தாய்நாட்டின் மீதான அன்பை அப்படியே வைத்திருப்பேன். அலுகோஸ் என்னை ஏற்றுக்கொள்ளட்டும் அவர் தூக்குகயிறை இழுத்தாலும் நான் கண்ணீர் மல்கேன் என்று வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தத்தின் வெற்றிக்காக போராடிய இராணுவத்திற்கு நானே தலைமைதாங்கினேன். இராணுவம் தொடர்பிலும் என்னைப்பற்றியும் பான் கீ மூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையை இன்று வரையிலும் நான் பார்க்கவில்லை அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு கிடைக்கவில்லை அவ்வறிக்கைக்கு நானே பதிலளிக்ககூடியவன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் நானும் எதிர்க்கட்சி தலைவரும் கைது செய்யப்பட்டிருப்போம். இன்று நான் சிறைச்சாலையில் இருக்கின்றேன் கே.பி அரசாங்க சிறையில் இருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையிலேயே இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையை ஐந்தாவது நாளாகவும் சமர்ப்பித்து வாசிக்கையில்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா வழங்க ஏற்பாடு மொரட்டுவ பல்கலையில் விசேட பயிற்சி






இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர் களுக்கு Online வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது.

இப்புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு தயாரிக்கவுள்ளது.

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டினரும், இலங்கை ஊடாக செல்லும் வெளி நாட்டினரும் இவ்வாறு Online வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிப்பவருக்கு விசா வழங்கப்பட்டு விட்டதற்கான அறிவித்தல் ஷிணிஷிஊடாகவோ,லீசீailஊடாகவே அறிவிக்கப்படும்.

விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும்.

இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.
மேலும் இங்கே தொடர்க...