28 மே, 2011

சிறுநீரக சிகிச்சைக்காக ரஜினி சிங்கப்பூர் பயணம்




சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தக வல்கள் வெளியாகி யுள்ளன.

ரஜினிகாந்தின் பயணம் தொடர்பில் பல்வேறுபட்ட குழப்பகரமான தகவல்கள் வெளியாகின. அவரின் பயண திகதிகள் திடீர் திடீரென மாற்றப்பட்டன. மேலும் லண்டன், செல்லவுள்ளதாகவும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் பின்னர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியான அம்புலன்ஸ் விமானம் ஒன்றில் அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ரஜினிகாந்தை சிங்கப்பூரிலுள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் சிங்கப்பூர் என்ற மருத்துவமனையில் சேர்க்கவும் குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மேலதிக சிகிச்சைக்காக மனைவி, மகளுடன் இன்று (27-05-2011) இரவு 11 மணிக்கு ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சிறுநீரக சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளிநாடு செல்கிறார்.

சிறுநீரக பாதிப்புக்கு விரைவான சிகிச்சை பெறுவதற்காக, ரஜினிகாந்த் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்கிறார். முதலில் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இப்போது அவருடைய பயண திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை 29 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளிநாடு புறப்படுவார். இதற்காக அம்புலன்ஸ் போன்ற தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந் நிலையில் ரஜினிகாந்த் பூரண குணம் அடையவேண்டி, அவருடைய ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் விசேட பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தி வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் பால்குடம் விளக்கு பூஜை, பால் அபிஷேகம், மண் சாப்பாடு, 101 பேர்களுக்கு அன்னதானம் ஆகியவற்றிலும் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக