27 மே, 2011

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா வழங்க ஏற்பாடு மொரட்டுவ பல்கலையில் விசேட பயிற்சி






இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர் களுக்கு Online வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது.

இப்புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு தயாரிக்கவுள்ளது.

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டினரும், இலங்கை ஊடாக செல்லும் வெளி நாட்டினரும் இவ்வாறு Online வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிப்பவருக்கு விசா வழங்கப்பட்டு விட்டதற்கான அறிவித்தல் ஷிணிஷிஊடாகவோ,லீசீailஊடாகவே அறிவிக்கப்படும்.

விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும்.

இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக