27 மே, 2011

ஈரானில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொலை, பாலியல் வல்லுறவு ,கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

ஈரானின் டெஹ்ரானில் உள்ள ஷிராஸ் நகரில் வைத்தே நேற்று இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அந்நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனையே வழங்கப்பட்டு வருகின்றது இதுவும் பல சமயங்களில் பொது மக்கள் முன்னிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.

ஈரானின் இக் கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் ‌தெரிவித்துள்ள போதிலும் தமது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு இத்தகைய தண்டனைகள் அவசியமென ஈரான் தெரிவிக்கின்றது. இதேவேளை நேற்று மேலும் 7 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானில் இவ்வருடத்தில் 143 பேருக்கு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் அங்கு 179 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாகவும், சீனாவிற்கு அடுத்ததாக அதிகப்படியான மரணதண்டனைகள் இங்கேயே நிறைவேற்றப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக