27 மே, 2011

தூக்குமேடையில் ஏற்றி அலுகோசு கயிறை இழுத்தாலும் கண்ணீர் மல்கேன்: பொன்சேகா

சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்றினாலோ எனது தாய்நாட்டின் மீதான அன்பை அப்படியே வைத்திருப்பேன். அலுகோஸ் என்னை ஏற்றுக்கொள்ளட்டும் அவர் தூக்குகயிறை இழுத்தாலும் நான் கண்ணீர் மல்கேன் என்று வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தத்தின் வெற்றிக்காக போராடிய இராணுவத்திற்கு நானே தலைமைதாங்கினேன். இராணுவம் தொடர்பிலும் என்னைப்பற்றியும் பான் கீ மூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையை இன்று வரையிலும் நான் பார்க்கவில்லை அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு கிடைக்கவில்லை அவ்வறிக்கைக்கு நானே பதிலளிக்ககூடியவன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் நானும் எதிர்க்கட்சி தலைவரும் கைது செய்யப்பட்டிருப்போம். இன்று நான் சிறைச்சாலையில் இருக்கின்றேன் கே.பி அரசாங்க சிறையில் இருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையிலேயே இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையை ஐந்தாவது நாளாகவும் சமர்ப்பித்து வாசிக்கையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக