5 ஜூன், 2011

புதிய புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு இலங்கை வரும் இந்தியக் குழு

இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசி யல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் ரி.கே. நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.

கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இந்த உயர்மட்டக் குழுவினர் தீர்க்கமாக ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக