28 மே, 2011

நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை 5 பேர் பலி; பெருமளவானோர் பாதிப்பு



நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தினாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரு குழந்தைகளும் அடங்குவர்.

கேகாலை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் பல பகுதிகளிலுள்ள வீதிகள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு இடம்பெற்ற மண்சரிவில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்மீது மண்மேடு இடிந்து விழுந்ததனாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனமழையினால் களுகங்கை, களனிகங்கை, நில்வள கங்கை மற்றும் கிங்கங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்கள் தொடர்ந்தும் உயர்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, கொட்டியாகும்புற படகல்தெனிய வீதி நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 20 வீடுகள் பகுதியளவில் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகவும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் தவளம மற்றும் கினிதுமை ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக இதுவரை 450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென்று வானிலை அவதான நி>லையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக