7 ஜூன், 2011

கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முற்பகல் 11 மணிக்கு கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

காணாமல் போனோரை கண்டறிந்து தருமாறு கோரியும் காணாமல் போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்காமையைக் கண்டித்தும் நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முற்பகல் 11 மணிக்கு கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

காணாமற் போனோரை தேடியறியும் குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் இன்றுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான பதில் எதனையும் முன் வைக்காத நிலையில் இருந்து வருகின்றது. இதனால் காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் தமது உறவுகளைத் தேடி கவலையுடனும் கண்ணீருடனும் வாழ்ந்து வருகின்றனர்.

பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காணாமற் போனோரை தேடியறியும் குழு எதிர்வரும் 2011.06.08 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு லிப்டன் சுற்று வட்டத்தில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இத்தகைய போராட்டத்தின் மூலமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து அரசாங்கத்தை பணிய வைக்க முடியும். நீண்ட காலமாக துயரத்தில் வாழ்ந்து வரும் இந்த குடும்பங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு அனைவரையும் அணி திரளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக