7 ஜூன், 2011

அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பிய கைதி கைது

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறையிலிருந்து நான்கு மாதங்களின் முன்னர் தப்பிச் சென்ற குறித்த கைதி தம்புள்ள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற கைதி தனது பெயரை மாற்றி திருகோணமலை பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் பெண் பொலிஸாரின் ஊடாகவே கைதியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக