5 மே, 2011

மாத்தறை, மாவரல்லயில் இனந்தெரியாதோர் சூடு: 6 பஸ் வண்டிகள் பலத்த சேதம்






மாத்தறை மாவரல்ல பகுதியில் நேற்று அதிகாலையில் இனந் தெரி யாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு பஸ் வண்டி களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மாத்தறை - மித்தெனிய, மாத்தறை - கம்புறுபிடிய ஆகிய வீதிகளில் போக்குவரத்துச் செய்யும் பஸ் வண்டிகளுக்கே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளது.

பஸ் வண்டி உரிமையாளரின் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஏழு பஸ் வண்டிகளில் ஆறு பஸ் வண்டிகளுக்கே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ரீ. 56 துப்பாக்கிகளுக்கு பயன் படுத்தும் ரவைகளை ஒத்த பன்னிரண்டு துப்பாக்கி ரவைகள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க இது சம்பந்தமான விசாரணைகளை செய்ய பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக