1 மே, 2011

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் மூடப்படும் வீதிகள்



மே தின ஊர்வலத்தை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன எனப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எவ்.ஆர். சேனநாயக்க மாவத்தை கன்னங்கர வீதிச் சமிக்ஞை சந்தியில் இருந்து தர்மபால மாவத்தை வரை மூடப்படவுள்ளது. அத்துடன் கிறீன் பாத் ஹோர்ட்டன் சுற்று வட்டத்தில் இருந்து பொது நூலகசாலை சுற்று வட்டம் வரையும், பேஸ் லைன் வீதி தெமட்டகொடை சந்தியில் இருந்து பொரளை சந்தி வரையும், பார்க் வீதி பார்க் வீதியில் இருந்து இசிபத்தன சந்திவரையும் மூடப் படும்.

அனைத்து மே தின ஊர்வலங்களும் இடம்பெறும் வேளையில், அந்தந்த வீதிகளில் இருந்து ஊர்வலங்கள் சென்று நிறைவடையும் வரை குறித்த வீதிகள் மூடப்பட்டிருக்குமென்றும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக